கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று மாலை மஞ்சள் விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய கேகாலை மாவட்டத்தில் ருவண்வெல்ல பிரதேச செயலக பிரிவில் சில பகுதிகளுக்கும் இரத்தினப்புரி மாவட்டத்தில் குருவிட்ட, எலப்பான, இரத்தினபுரி மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது