ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் இறுதி அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட காரியாலய செயற்குழுவை அரச ஊழியர்களாக நியமனம் செய்யுமாறு கோரி அமைச்சரவைப் பத்திரம் இரண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.