இலங்கையில் மேலும் 170 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9092 ஆக அதிகரித்துள்ளது.