வத்தளையில் பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 119 பேருக்கு கொரோனா!

வத்தளை பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கொரோனா பரவியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது 119 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொழிற்சாலையில் 697 பேர் வேலை செய்வதாகவும் இவர்களில் சுமார் 400 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.