கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 213 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் வெலிக்கந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.