மேலும் 221 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா!

மேல் மாகாணத்தில் இன்றைய தினம் 221 காவல்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத்தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 300 ஆகவும், சுய தனிமைப்படுத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 1,385 ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.