மட்டக்களப்பில் தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை

IMG 5501
IMG 5501

மட்டக்களப்பு நகர்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 5 பேர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகள், வீதிகளில் தொற்று நீக்கி வீசும் நடவடிக்கையை இன்று (07) காலை முன்னெடுத்தனர்.

லொயிட்ஜ் அவனியூர் வீதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களின் வீடு மற்றும் அருகிலுள்ள வீடுகள் ,வீதிகள் ,ஒழுங்கைகள் உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தண்ணீர் வீசும் வாகனத்தின் மூலம் தொற்று நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.