பலாங்கொடை தலங்கம பகுதியில் உள்ள காணியொன்றில் விலங்குகள் வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி இன்று அதிகாலை(07) நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் கஹவத்த-வெல்லந்துர பகுதியில் வசித்து வந்த 33 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.