மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

airline 3 568x355 1
airline 3 568x355 1

கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 71 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, கட்டார் நாட்டின் டோஹா நகரில் இருந்து கட்டார் எயார்வைஸுக்குச் சொந்தமான QR – 668 எனும் விமானம் ஊடாக 17 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாய் நகரில் இருந்து 35 இலங்கையர்கள் கட்டார் எயார்வைஸுக்குச் சொந்தமான EK – 648 எனும் விமானம் ஊடாக நேற்று இரவு 11.30 இற்கு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மேலும், ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து ஓமான் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான WY – 373 விமானம் ஊடாக 19 பேர் நேற்று இரவு 7.45 இற்கு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளவர்கள் அனைவரும் தனிமைப்பட்டுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாய் விளையாட்டரங்கில் உள்ள 275 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களுக்கான விமான பயணச்சீட்டுகள் வழங்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நாளை மறுதினம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக விமான நிலைய அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.