கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகளைச் சந்திப்பது தவிர்க்க முடியாதது- இராணுவ தளபதி

download 12 2
download 12 2

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உயிரிழப்புகளைச் சந்தித்திப்பது தவிர்க்க முடியாதது, என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை எமக்கு பெரும் சவாலாக உள்ளது. எனினும், இதை எம்மால் விரைவில் கட்டுப்படுத்த முடியும். பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படாதவர்கள் தொற்றின் தாக்கத்தால் வீட்டிலேயே இறக்கின்றார்கள். இது தவிர்க்க முடியாத நிலைமை.

கொரோனாவால் நாட்டின் பல இடங்களில் முடக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இந்த முடக்கல் நிரந்தரம் இல்லை. படிப்படியாக முடக்கலைத் தளர்த்துவோம்”. முழு நாட்டையும் முடக்கல் நிலையில் வைத்திருக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை. எத்தனையோ மக்கள் நாளாந்த வாழ்வாதாரத்தை நம்பியே வாழ்கின்றார்கள்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .