கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஒரு மீற்றர் இடைவெளி போதாது -வைத்தியர் ஜயருவன் பண்டார

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஒரு மீற்றருக்கு மேல் சமூக இடைவௌியைக் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஒன்றரை அல்லது இரண்டு மீற்றர் சமூக இடைவௌியைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நோயை கட்டுப்படுத்தும் பிரதானமான நடைமுறை மக்களின் நடவடிக்கைகளிலேயே இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.