கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி வவுனியா கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட திருப்பலி ஆராதனை ஒன்று இன்று இடம்பெற்றது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட ஆராதனைகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வவுனியா, இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்கு தந்தை ஜெயபாலன் அடிகளால் தலைமையில் இவ் விசேட திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரமர் ஆகியோருக்கு ஆசி வேண்டியும், கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காத்து, அவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் விசேட திருப்பலி ஆராதனை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல, காவற்துறை அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.