அதிவேக வீதிகளின் உள்வரும் மற்றும் வெளியேறும் பகுதிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறை அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அதிவேக வீதியின் உள்வரும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.