கிளிநொச்சி பெரியபரந்தன் டி5 கிராமத்தில் நேற்றிரவு (08) வீசிய காற்றினால் குடும்பம் ஒன்று வசித்து வந்த தற்காலிக வீடு சேதமடைந்த குறித்த குடும்பம் ஆட்டுக் கொட்டிலில் தற்போது தங்கியுள்ளனர்.
நேற்றிரவு பெய்த மழையுடன் கூடிய காற்று காரணமாக பெரியபரந்தன் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் வசிக்கின்ற விநாயகமூர்ததி நித்தியானந்தன் என்பவரது தற்காலிக வீட்டின் கூரை காற்றினால் பிடுங்கி எறியப்பட்டுள்ள நிலையில் தற்போது காணியில் உள்ள ஆட்டுக்கொட்டில் ஒன்றில் தங்கியுள்ளனர். அத்தோடு அப்பிரதேசத்தில் வேம்பு ஒன்று முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிராம அலுவலர் ஊடாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்டுள்ள குறித்த குடும்பத்திற்கு உடனடியாக அவர்களது சேதமடைந்த வீட்டின் கூரையினை
திருத்துவதற்கு உதவி தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.