யாழ்ப்பாண மாவட்ட வணிகர் சங்கம் மற்றும் தொழில் முனைவோர்களிடம் ஒரு கலந்துரையாடல் ஒன்று (08) யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் பங்கேற்புடனும் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்தில் தற்காலத்தில் வணிகர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் தொடர்பிலும் கொவிட் – 19 இடர்காலத்தில் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் தொடர்பிலும் வணிக நிலைய ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் தொடர்பிலும் புதிதாக தொழில் முனைவோர்களுக்கு அரசாங்கத்தால் தேவையான உதவிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலின் போது பலரால் வங்கிகளின் கடன் மற்றும் வட்டி பிரச்சனை தொடர்பில் அதிகளவு கூறப்பட்டதால் இந்த விடயம் சம்மந்தமான இராஜாங்க அமைச்சரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து அங்கஜன் இராமநாதன் பங்கேற்புடன் இந்த விடயங்கள் பற்றி ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுகொள்ளுமாறு நாமல் ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.