கொரோனாவின் இரண்டாம் அலை குறித்து அரசாங்கத்திடம் தெளிவில்லை-நா உ ஹேஷா விதானகே

download 4 4
download 4 4

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் இரண்டாம் அலை குறித்து அரசாங்கத்திடம் ஒருமித்த நிலைப்பாடு காணப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சுகாதார தரப்பும், சுகாதார அமைச்சரும் மாறுப்பட்ட கருத்துக்களையே தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டு தற்போது ஒருமாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில், ஒவ்வாரு நாளும் எவ்வாறு சமாளிப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டு சுகாதார அமைச்சரினால் கருத்துக்கள் வெளியிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைத்தியத்துறை சார்ந்த அதிகாரிகளின் அனைத்து கருத்துக்களும் சுகாதார அமைச்சரின் கருத்துக்கு முரணானதாகவே காணப்படுவதாக என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.