கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 184 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இன்றைய தினம் மாத்திரம் 356 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.