இதுவரையில் 460 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா!

ajith2
ajith2

இன்று வரையில் 460 காவல்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவர்களுள் சிலர் பூரண குணமடைந்து வீடுகளுக்கும் திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பினுள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் காவல்துறை அதிகாரிகள் தொடர்பில விசாரணை செய்வதற்காக இன்று (10) முதல் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் மூவரை காவல்துறைமா அதிபர் நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.