நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து சிறுமி பலி.

unnamed 1 3
unnamed 1 3

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியில் புதிதாக வெட்டப்பட்ட மலசலகூட குழியில் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

IMG 4dcec4b0c28b22021f77f72cdc26f020 V


இன்றையதினம் சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தவறுதலாக மலசல கூடக்குழியில் விழுந்துள்ளார்.

DSC04013


இதனை அவதானித்த சிறுமியின் உறவினர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் குறித்த சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளார்.

DSC04007


சம்பவத்தில் ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் சஜீவினி (வயது 6) என்ற சிறுமியே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலசல கூடத்திற்காக புதிதாக வெட்டப்பட்ட குழியில் மழை நீர் நிரம்பியிருந்த நிலையில் சிறுமி அதனுள் விழுந்து மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ReplyForward