வவுனியாவில் சுகாதார பிரிவினரின் உத்தரவினை மீறி செயற்படும் பிரபல சைவ உணவகம்

hotel 2
hotel 2

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் சுகாதார பிரிவினரின் உத்தரவினை மீறி செயற்படுகின்றது.

hotel 4

நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் 19 தாக்கம் காரணமாக சுகாதார பிரிவினரின் தீர்மானங்களுக்கு அமைவாக வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் இம்மாதம் 6ம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளதுடன், உணவுகளை பொதி செய்து மாத்திரம் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயற்படும் உணவக உரிமையாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்திருந்தார்.

hotel 3
hotel 3

இந் நிலையில், வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவினையும் மீறி முன்பகுதியில் அமர்ந்திருந்து உணவருந்தாது, வெளித்தெரியாத வகையில் உணவகத்தின் உள்ளே உள்ள பகுதியில் அமர்ந்து உணவருந்துவதற்கு அதன் உரிமையாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இவ்விடயம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு பொதுமக்களினால் முறைப்பாடும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது