விபத்துக்குள்ளாகிய லொறி;இருவர் படுகாயம்!

Accident 1
Accident 1

பூண்டுலோயா – கொத்மலை பிரதான வீதியின் பாளுவத்த பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பூண்டுலோயா பகுதியிலிருந்து கம்பளை நோக்கி நிறப்பூச்சு (பெயின்ட்) வகைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் சாரதியும் உதவியாளரும் பலத்த காயங்களுக்குள்ளாகி கொத்மலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துக் குறித்து மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.