சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி!

62ed693f 484548 550x300 crop 1
62ed693f 484548 550x300 crop 1

கடந்த தினம் மத்துகம பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அநேகமானோர் இனங்காணப்பட்ட நிலையில் அவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட மதுகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதயைின் குறித்த நபருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த தொற்றாளருடன் நெருங்கிப் பழகிய அந்த அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹொரணை குருகொடவில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையின் 200க்கும் அதிகமான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த தொழிற்சாலையுடன் இணைக்கப்பட்ட அகலவத்தை கெகுலன்தல மற்றும் பிம்புரவில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் தேர்வு செய்யப்பட்ட சில ஊழியர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் மூன்று கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து கடந்த 4 ஆம் திகதி மேலும் 204 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கெகுலன்தல தொழிற்சாலையில் கொரோனா தொற்று உள்ளானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.