இயந்திரக் கோளாறு காரணமாக யாழில் 18 இந்திய மீனவர்கள் கரையொதுங்கியுள்ளனர்.

vlcsnap 2020 11 10 18h06m59s414
vlcsnap 2020 11 10 18h06m59s414

சீரற்ற காலநிலை மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக 18 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம், வடமராச்சி கிழக்கு பகுதியில் கரையொதுங்கியுள்ளனர்.


மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட சுண்டிக்குளம் கடற்கரையில் 14 மீனவர்களும், மாமுனையில் 4 மீனவர்களும் கரையொதுங்கியுள்ளனர்.


தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலமை காரணமாகவும், இலங்கை அரசாங்கத்தின் நல்லினக்க  அடிப்படையிலும் குறித்த மீனவர்களை உடன் திருப்பி அனுப்புவதற்குரிய நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்மை குறிப்பிடத்தக்கது.