ஐ.எஸ் அமைப்பின் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கையில் – பிரிட்டன்

ஐ.எஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியா ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை ஐ.எஸ் இழந்த பின்னர் மிகவும் ஆபத்தான ஐ.எஸ் உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் அமைப்பு தனது சாம்பலில் இருந்து மீண்டும் எழுகின்றது. சர்வதேச அளவில் கொலைகள் மற்றும் குழப்ப நடவடிக்கைகளில் அந்த அமைப்பு ஈடுபடுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொசாம்பிக்கின் வடபகுதியில் ஐ.எஸ் அமைப்பின் தாக்குதலில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.