வீட்டு பொருளாதார போசணையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டும்தேசிய வீட்டுத்தோட்ட செயற்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்கும் செயற்பாடு ஒன்று இன்றைய தினம்(11) பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்றது .
இதன்போது வீட்டு தோட்டத்திற்கு தேவையான தக்காளி,கறிமிளகாய் ,கத்தரி, பச்சமிளகாய் போன்ற விதை தானியங்கள் நூறுபயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
குறித்த நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வை தவநாதன் சிகரம் ஊடக நிறுவனத்தின் பணிப்பாளர் கோ.றுஷாங்கன் ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் நந்தகுமார் , பச்சிலைப்பள்ளி பிரதேசபை உறுப்பினர் நகுலேஸ்வரன் மற்றும் திட்ட முகாமையாளர் ,சமுர்த்தி உத்தியோகிஸ்தர் ,கிராம அலுவலகர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகிஸ்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்என எமது விஷேட செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.