மேல் மாகாணத்தில் மேலும் 53 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று!

images 2 1
images 2 1

கடந்த 24 மணி நேரத்தில் மேல் மாகாணத்தில் மேலும் 53 காவல்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவருமே தனிமைப்படுத்தல் மையங் களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 29ஆயிரத்து 266 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 80 ஆயிரம் பேர் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.