தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வார இறுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படாது-இராணுவத்தளபதி

Army.Commander.Lieutenant.General.Shavendra.Silva .1 1 300x150 1
Army.Commander.Lieutenant.General.Shavendra.Silva .1 1 300x150 1

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வார இறுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படாது என்றுஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வார இறுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,அவ்வாறான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என கூறினார்.

பண்டிகை ஒன்று இருப்பதை அறிந்தும் நாம் அவ்வாறு செயற்பட போவதில்லை. நாட்டு மக்கள் எத்தகைய நிலைமைகள் இருந்த போதிலும் புத்திசாதூர்யமாக செயல்படுவார்கள் என்று தெரிவித்தார்.