அடுத்த வருடம் முதல் பருப்பின் விலையில் ஏற்பட போகும் மாற்றம்!

images 4 1
images 4 1

அடுத்த வருடம் முதல் பருப்பு கிலோவொன்றினை 150 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வர்த்தக சம்மேளனம் மற்றும் சதொச ஊடாக குறித்த விலையில் பருப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் கிராம மட்டத்தில் இளம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், நியாயமான விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கு விசேட விற்பனை நிலையங்களை உருவாக்க உள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.