அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
பகல், இரவு நேரங்களில் வீதிகளில் செல்லும் சந்தேகத்துக்கிடமான வாகனங்களை இராணுவத்தினர் சோதனையிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் அம்பாறையில் அதிகரித்து வரும் கஞ்சா கடத்தல், சட்டவிரோதமான மணல் அகழ்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறுவோரை கண்காணிக்கவும் இராணுவத்தினர் இவ்வாறு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்.