முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபித்தல் போன்ற விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதை தெரிவித்தார்.
இதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்