திருகோணமலை மாவட்ட தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

suthakaran
suthakaran

திருகோணமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள 307 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டி விநியோக நடவடிக்கைகள் திருகோணமலை விபுலானந்தா வித்தியாலயத்தில் இருந்து நடைபெற உள்ளதாகவும் இதற்குரிய ஏற்பாடுகள் யாவும் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக கிழக்குமாகாண பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று மாவட்டத்தின் வாக்கெண்ணும் பிரதான நிலையமாக செயற்படும் மிஹிந்து புரத்திலுள்ள தொழில்நுட்ப கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டு மாலை 7 மணி முதல் சகல வாக்கு எண்ணும் நிலையங்களிலும் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.