மழையுடனான வானிலையானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும்- வளிமண்டளவியல் திணைக்களம்!

rain srilanka001
rain srilanka001

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என
வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சிலாபம் முதல் புத்தளம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

இதன் காரணமாக கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.