தேர்தல் தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!

usa empasy
usa empasy

ஜனாதிபதித் தேர்தலுக்கான களநிலைமைகள் பரபரப்பாக காணப்படுகின்ற நிலையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பின்னருமான காலப்பகுதிகளில் ஆர்பாட்டங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் தமது நாட்டு பிரஜைகளை அவதானமாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களுக்கு அருகில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சுற்றுலா தளங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பொது இடங்களுக்குச் செல்லும்போது அவதானமாக இருக்குமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தோடு உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் உள்நாட்டு ஊடகங்களை கண்காணித்து, புதிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.