சுற்றுலாதுறைசார்ந்த சாரதிகளுக்கு விசேட கொடுப்பணவு வழங்கப்படும் -சுற்றுலாதுறை அமைச்சர்

prasanna
prasanna

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கபட்டுள்ள சுற்றுலாதுறைசார்ந்த சாரதிகளுக்கு விசேட கொடுப்பணவுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சாரதிகளுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுப்பணவு அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படுமென பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்துக்குள் இந்த கொடுப்பணவுகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலாதுறை அபிவிருத்து சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சாரதிகளுக்கே இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, சுற்றுலாதுறை அபிவிருத்து சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள 3 ஆயிரத்து 85 சாரதிகளுக்கும், ஆயிரத்து 998 சுற்றுலா வழிகாட்டிகளுக்குமே இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.