பதவியேற்று ஓராண்டு நிறைவு அது தொடர்பிலான விழாக்கள் எதனையும் நடத்த வேண்டாம்-ஜனாதிபதி

2781e554d425f7da18b6cc53117d1379 XL
2781e554d425f7da18b6cc53117d1379 XL

நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்று ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில், அது தொடர்பிலான விழாக்கள் எதனையும் நடத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டினார்.

இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி அனுராதபுரத்தில் கோட்டாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், நாளை மறுதினம் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இந்த நிலையிலேயே அவர் விழாக்கள் எதனையும் நடத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர் எவ்வித நிகழ்வுகளையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் வீண் செலவுகளை செய்ய வேண்டாம் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.