சைவப் பெருவள்ளலாரும், பரமேஸ்வராக் கல்லூரியின் தாபகருமாகிய சேர். பொன். இராமநாதனின் 90 ஆவது குரு பூசை எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பல்கலைக் கழகத்தில் இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் காலை 8 மணிக்கு பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பார்வதி சமேத பரமேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை, வழிபாடுகள் இடம்பெறவுள்ளதுடன்,
பல்கலைக்களகத்தினுள் இருக்கும் சேர். பொன். இராமநாதனின் உருவச் சிலைக்கும், சபா மண்டபத்தில் உள்ள உருவப் படத்துக்கும் துணைவேந்தரினால் மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்படவுள்ளது.
பரமேஸ்வராக் கல்லூரி இயக்குநர் சபை, ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலய பரிபாலன சபை மற்றும் யாழ். பல்கலைக்கழக இந்து மன்றம் ஆகியவை கூட்டாக இந் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.