கொழும்பில் நாளை நீர் விநியோகத் தடை!

water cut fastnews
water cut fastnews

கொழும்பின் சில பகுதிகளில் 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாளை (வியாழக்கிழமை) இரவு 09.00 மணி முதல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 07.00 மணி வரை இவ்வாறு 1நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, ஹோமாகம, பன்னிப்பிட்டிய, பெலவத்த, மத்தேகொட ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

திருத்தப்பணிக் காரணமாக தற்காலிகமாக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.