நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு

unnamed 1 8
unnamed 1 8


நாட்டின் சில பகுதிகளுக்கான நீர் வழங்கல் நடவடிக்கையானது 10 மணிநேரம் தடைசெய்யப்படும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றிரவு 9.00 மணி முதல் நாளை காலை 7.00 மணிவரை நீர்வெட்டானது அமுல்படுத்தப்படவுள்ளது.

ஹோமகம, பன்னிபிட்டி, பெலன்வத்த மற்றும் மத்தேகொட பகுதிளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அவசர திருத்தப்பணிக் காரணமாகவே நீர் விநியோகமானது இவ்வாறு தடைசெய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.