இலங்கையின் 8வது ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகிய நிலையில் நாட்டின் முக்கிய தலைவர்கள் தமது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை எதிர்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை ஹம்பாந்தோட்டையில் பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.