வணிக இடங்களுக்குச் செல்லும்போது தங்கள் வீட்டில் இருந்து பேனாவை எடுத்துச் சென்று பயன்படுத்துமாறு காவல்துறையினர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இதன்மூலம் அவர்கள் தங்கள் விபரங்களை நுழைவாயிலில் உள்ள பதிவு புத்தகத்தில் பாதுகாப்பாக பதிவு செய்யமுடியும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் சொந்த பேனாவை எடுத்துச் சென்று இவ்வாறு பயன்படுத்துவது பாதுகாப்பானதுடன், சுகதாரமானதாகவும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.