போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

kaithu

கள்ள நோட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் மதவாச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் மற்றும் வவுனியா காவல்துறையினர் இணைந்து நேற்று அவர்களைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெளிநாட்டு போலி நாணயதாள்கள் 200, நாணயம் அச்சிடும் இயந்திரம், 100 டொலர் பெறுமதியான அமெரிக்க நாணயதாள்கள் மூன்று மற்றும் உபகரணங்கள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவர் எனத் தெரிவித்த காவல்துறையினர் , அவரிடம் இருந்து வெவ்வேறு பெயர்களில் தயாரிக்கப்பட்ட ஏழு மருத்துவர்களின் றப்பர் முத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், ஊசி மருந்துகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவித்தனர். கள்ளநோட்டுக்களை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் கொடுத்து அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கு முயற்சித்த வேளையிலே மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொட்டகலை, அனுராதபுரம் மற்றும் மொனராகலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் காவல்துறையினர் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.