நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நிதியின் கீழ் எட்டு பாடசாலையை சேர்ந்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட 295 மாணவர்களிற்கு வழங்கப்படவுள்ளது.
இதன் அடிப்படையில் இன்றையதினம் முதற் கட்டமாக 25 மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்களை வவுனியா பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான ஏ. ஆர். எம். லரீப், பாரி, திருமதி த. மஞ்சுளா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் வி. முகுந்தன் ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்திருந்தனர்.