முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் உடைய சூரன்போர் உற்சவம் இன்று (20.11.2020) மாலை சிறப்புற இடம்பெற்றது.
நாட்டில் இடம்பெற்று வரும் கொரோனா தொற்று நிலைமைகளை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளை பேணி மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களோடு மிகவும் பக்திபூர்வமாக சூரன்போர் உற்சவம் இடம்பெற்றிந்தமை குறிப்பிடத்தக்கது.