மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாடு திரும்ப முடியாது சிக்கித் தவித்த மேலும் 167 இலங்கையர்கள் அரசாங்கத்தின் அனுமதியுடன் நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி டுபாயிலிருந்து 68 இலங்கையர்கள் நேற்றிரவு கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அதேபோன்று கட்டாரின், தோஹாவிலிருந்து 42 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அத்துடன் மேலும் 57 இலங்கையர்கள் டுபாயிலிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் கொழும்பு நவலோக, லங்கா மற்றும் ஆசிரி தனியார் வைத்தியசாலைகளின் ஊழியர்களால் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்