திருமலை- தபால் மூல வாக்கெண்ணெல் ஆரம்பம்

trinco
trinco

திருமலை மாவட்டத்தில் திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய மூன்று தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 307 வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள் யாவும் தற்போது பிரதான வாக்கெண்ணும் நிலையமான மிஹிந்தபுரவில் அமைந்துள்ள தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்கெண்ணும் செயற்பாடு சற்று நேரத்துக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் முடிவுகளை 7 மணிக்குப் பின்னர் அறிவிக்க முடியும் என்று அரசாங்க அதிபர் தெரிவித்தார்.