பத்திரிகையாளர்கள் இருவருக்கு எதிராக கோப்பாய் காவல்துறையினர் வழக்கு தாக்கல் !

Hus Wife 03
Hus Wife 03

மாவீரர் தின நினைவேந்தலை தடை செய்யும் வகையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு எதிராகவும் கோப்பாய் காவல்துறையினர் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.

எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளை நினைவு கூறவுள்ளார்கள் எனத் தாம் சந்தேகிக்கும் நபர்களுக்கு எதிராக அவர்கள் நினைவு கூறல்களில் ஈடுபடுவதைத் தடை செய்யும் உத்தரவை வழங்கக் கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் கோப்பாய் காவல்துறையினரால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் காவல்துறையினர் குறிப்பிடப்பட்டுள்ள எதிராளிகளை நாளை 24 ஆம் திகதி, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்கு வந்து தடையுத்தரவைப் பெற்றுக்கொள்ளுமாறு இன்று மாலை முதல் கடிதங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், ஊடகவியலாளர்களான தே. பிறேமானந்மற்றும் த.காண்டீபன்ஆகியாருக்கு எதிராக கோப்பாய் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
.
இதே நேரம் – பருத்தித்துறை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் மாவீர்ர் தினக் கொண்டாட்டத்துக்குத் தடை கோரி, காவல்துறையினரால் தொடுக்கப்பட்ட வழக்கிலும் வடமராட்சியைச் சேர்ந்த காண்டீபன் என்ற செய்தியாளருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும், காவல்துறையினராலேயே அது மீளப் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்-