கொழும்பு கொம்பனித் தெருவில் ஒரேநாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று !

99d2bfe5 a0a4ab00 de2a5767 aa3f6a16 covid 19 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
99d2bfe5 a0a4ab00 de2a5767 aa3f6a16 covid 19 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

கொம்பனித் தெருவில் ஒரேநாளில் 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் 458 கரோனா நோயாளிகள் பதிவாகினர். அவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் 259 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவர்களில் கொம்பனித் தெருவைச் சேர்ந்த 90 பேர் அடங்குவதாகவும் குறித்த செயற்பாட்டு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.