வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு அமைச்சர் விமல் வீரவன்ச விஜயம்!

வீரவன்ச
வீரவன்ச

வாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைத்தது போன்று இப்பகுதிக்கான குடி நீர் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலையில் இயங்காமல் இருந்து தற்போது கடதாசி ஆலை வளாகத்திற்குள் பாவனைக்காக பயன்படுத்தும் குடி நீர் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை பார்வையிட்டதுடன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்த கருத்து தெரிவிக்கையில்,

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மூடப்பட்டிருந்த வாழைச்சேனை கடதாசி ஆலை ஜனாதிபதி கோட்டாபாயாவின் ஆலோசனையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் புனரமைப்பு செய்யப்பட்டு தற்போது இயங்க ஆரம்பித்துள்ளதுடன் இதன் உற்பத்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

இதே போன்று இங்கு உள்ள குடி நீர் திட்டமும் புனரமைப்பு செய்யப்பட்டு இப்பகுதிக்கான குடி நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அமைச்சின் உயர் அதிகாரிகள் கிழக்கு மாகாண மற்றும் மாவட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

1606303991 vimal 2