இணைய தொழில்நுட்பத்தின் காணொளி (Online)மூலம் இடம்பெறவுள்ள பொது நிறுவனங்கள் குழுவின் கூட்டத்தொடர்!

arun 031219 cope 1 1280x720 1 720x380 1
arun 031219 cope 1 1280x720 1 720x380 1

பொது நிறுவனங்கள் குழுவின் கூட்டத்தொடர் நாளைய தினம் முதன்முறையாக இணைய தொழில்நுட்பத்தின் காணொளி (Online) ஊடாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இணைய தொழில்நுட்பத்தின் காணொளி ஊடாக நாளை (26) இந்த கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, களனி கங்கையின் நீர் மாசுபாடு தொடர்பில் கோப் குழுவில் நாளை கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கபபடுகிறது.

இதன்போது, சுகாதாரம், கைத்தொழில் மற்றும் பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகங்களின் செயலாளர்கள் காணொளி ஊடாக தொடர்புகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.