மட்டக்களப்புமாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 15 பேர் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு கோட்டைமுனை பொதுச் சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பிரிவில் இன்று புதன்கிழமை (25) மேற்கொண்ட திடீர் தேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் ஒருவருக்கு தலா 2000 ரூபா அபராதம் விதித்தார்.
இவ்வாறான அசௌகரியங்களைத் தவிர்த்து பொது மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக் கவசங்களை அணிந்து செல்லுமாறு மட்டக்களப்பு சுகாதாரப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.